கோப்பாய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள கலாச்சார உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், வழிகாட்டல் பயிற்சிகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 40ற்கும் அதிகமான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.