உருத்திரபுரம் பங்கின் கோணாவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.
இவ்வாலயத்திற்கான அடிக்கல் முன்னைநாள் பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் 2020ஆம் ஆண்டு நாட்டிவைக்கப்பட்டதுடன் அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் காலத்தில் ஆலய கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகி தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் பணிக்காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.