யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மூதாளர் தங்குமிட கட்டடத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இக்கட்டத்தை ஆசீர்வதித்து அதனை முதியோர் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி பிறிஸ்சில்லா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து இல்லத்தை ஆசீர்வதித்து இக்கட்டடத்தில் முதியோர் பராமரிப்பு சேவையை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிலையத்தில் தற்போது 30 வரையான முதியவர்கள் இச்சேவையை பெற்றுவருகின்றனர்.

இம்முதியோர் இல்லவளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் புதிய கட்டடத் தொகுதிகளுக்கான நிதி அனுசரணையை ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் வழங்கிவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin