இரத்ததானம் செய்வீர்! மனித உயிர் காப்பீர்! எனும் தொனிப்பொருளில் கொழும்புத்துறை இளையோர் ஒன்றியமும் சென் றொசாறியன் சனசமூக நிலையமும் இணைந்து தற்போதைய குருதித் தேவையினை கருத்தில் கொண்டு முன்னெடுத்த இரத்ததானம் முகாம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
அமரர் சுபீட்சன், அமரர் டெனிஸ்ரன் நினைவாக கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற இம்முகாமில் 20 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

