குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்கு மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.