தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து குளமங்கால் பங்கின் புனித சவேரியார் ஆலயம் வறுத்தலைவிளான் அற்புத குழந்தை இயேசு ஆலயம் மற்றும் நல்லிணக்கபுரம் புனித அமைதியின் அரசி ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் திருப்பலி நிறைவில் பேரப்பிள்ளைகளால் தாத்தா பாட்டியர்களுக்கான கௌரவிப்புக்கள்
இடம்பெற்றன.

அத்துடன் அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக தாத்தா பாட்டிகளுக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 70 வரையான தாத்தா பாட்டியர் கலந்து மாதகல் புனித லூர்து அன்னை கெபி மற்றும் நட்புமண் பூங்காவை தரிசித்தனர்.

By admin