குருநகர் பங்கில் இவ்வருடம் உறுதிபூசுதல் பெறவுள்ள மாணவர்களால் அருளடையாளங்கள் எனும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கண்காட்சி 3ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் உதவியுடன் மறையாசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்காட்சி நிகழ்வை காலி மறைமாவட்டத்திலிருந்து வருகைதந்துள்ள திருத்தொண்டர் சஜித் கிறிஸான் குணசேகர அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

By admin