மன்னார் மறைமாவட்டம் முருங்கன் பங்கை சேர்ந்த சலேசியன் துறவற சபை திருத்தொண்டர் செபமாலை சராம் சத்தியதாஸ் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர் செபமாலை சராம் சத்தியதாஸ் அவர்கள் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இத்திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் சலேசியன் துறவற சபை மாகாண முதல்வர் அருட்தந்தை றொசான் மிராண்டா, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்தந்தையின் உறவினர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin