மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருக்களுக்கான திருவழிபாட்டு கருத்தமர்வு கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்பப்பணி நிலையத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்த அருட்தந்தை சூசைநாதன் அவர்கள் வளவாளராகக் கலந்து கருத்துரைகள் ஊடாக குருக்களை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த 60 வரையான குருக்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin