கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கருத்தமர்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உருத்திரபுரம் ஆரோபணம் சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆரோபணம் சிறுவர் இல்ல இயக்குனர் அருட்தந்தை சசிகரன் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோருக்கான விழிப்புணர்வு கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.

கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் 70ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியதுடன் அவர்களுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

By admin