கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை ஆரோபணம் சிறுவர் இல்ல இயக்குனர் அருட்தந்தை சசிகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin