கிளிநொச்சி பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித திரேசாள் மறைப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் 35க்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

