கிளிநொச்சி பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

உதவி பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ்டிலக்சன், அருட்சகோதரி மரியமலர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியை மெற்றில்டா ஆகியோரின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் கலந்து புனித திரேசாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்து 37 சிறார்களுக்கு முதல்நன்மை அருட்சாதனம் வழங்கிவைத்தார்.

By admin