கிளிநொச்சி உருத்திரபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குபணிமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய பங்குமனை திறப்புவிழா 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய பங்குப்பணிமனையை ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.


