காலி மறைமாவட்டத்தில் இறைபணியாற்றி ஓய்வுபெற்ற குருக்களை கௌரவித்து முன்னெடுத்த ஓய்வுநிலை குருக்கள் தின சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை கலேகன பிரதேசத்தில் அமைந்துள்ள நிசன்சல ஓய்வுநிலை குருக்கள் இல்லத்தில் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியை தொடர்ந்து ஓய்வுநிலை குருக்களுடனான கலந்துரையாடலும் அவர்களை கௌரவித்து பரிசுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

By admin