யாழ். கரித்தாஸ் கியுடெக் நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் குளமங்கால், சாவகச்சேரி, பண்டத்தரிப்பு பங்குகளை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இளையோர் குழுக்களை இணைத்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இயற்கை வளங்களின் வரலாற்று குறிப்புக்களை அறியும் நோக்கில் நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் நெடுந்தீவு பிரதேசத்தை தரிசித்து அங்குள்ள பிரசித்திபெற்ற இடங்களை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் 40 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin