கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 6, 7, 8, 9ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி அணி 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதலிடத்தை பெற்று சம்பியன் பட்டத்தையும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதலிடத்தை பெற்று சம்பியன் பட்டத்தையும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

By admin