கருவி மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருவி நிறுவன தலைவர் திரு. கணபதி சர்வானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி லுமினா போல்ராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கருவி நிறுவன வளவாளர் கவிஞர் திரு. டானியல் சௌந்தரம் மற்றும் இன்பத்தேன் மென்பான நிலைய உரிமையாளர் திரு. றஞ்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin