கரவெட்டி புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14 ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

அத்துடன் மன்னார் மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூர்ந்து கொடியேற்ற நாளன்று அன்னையின் சுருபத்திற்கு முடிசூட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து அன்னையின் திருச்சொருபத்திற்கு பொன்முடி சூட்டிவைத்தார்.

By admin