குடும்பங்களுக்கிடையே உறவை வலுப்படுத்ததும் நோக்கில் கந்தரோடை றோசா மாதா ஆலய மக்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா இம்மாதம் 03ஆம் 04ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைமக்கள் குடும்பங்களாக திருகோணமலை மறைமாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு கிண்ணியா வென்நீருற்று, திருக்கோணஸ்வரம் போன்ற பிரசித்திபெற்ற இடங்களை தரிசித்துடன் அலஸ் தோட்டம் இறையிரக்க ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியிலும் பங்குபற்றினர்.

இக்கள அனுபவ சுற்றுலாவில் 50 வரையானவர்கள் பங்குபற்றினர்.

By admin