கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றுடன் நற்கருணை ஆராதனையும், புனிதரின் திருச்சுருப பவனியும் இடம்பெற்றன.
தொடர்ந்து சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி இடம்பெற்றதுடன் திருப்பலியை இந்நியா நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இவ்வழிபாடுகளில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ். மவைட்ட அரச அதிபர், இந்திய துணைத்தூதுவர், கடற்படை உயர் அதிகாரிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகைதந்த 9000ற்கும் அதிகமான பக்தர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin