கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிவபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், இவ்வருடம் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 8000 பக்தர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்களென தெரிவிக்கப்பட்டதுடன் இவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் உணவு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன், நெடுந்தீவு பிரதேச செயலர் திரு. சத்தியசோதி, யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், கடற்படை பிராந்திய பொறுப்பதிகாரி, பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

By admin