திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் வழிகாட்டலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளலாய் மடு அன்னை ஆலயம், அந்தோனிபுரம் புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி புனித அந்தோனியார் ஆலயம், வள்ளுவர்புரம் புனித வேளாங்கன்னி ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
தொடர்ந்து இந்நாளை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறார்களுக்கான கலைநிகழ்வுகளும் விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

By admin