ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா மற்றும் நற்கருணைவிழா திருப்பலிகளை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா திருப்பலியின் நிறைவில் அன்னையின் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் இத்திருப்பலியில் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திரு. குமாரவேள், ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரி, தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin