திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிங்சிலி றொபேர்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.