இல்லற வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஞான ஒடுக்கம் கடந்த 21, 22, 23ஆம் திகதிகளில் உடையார்கட்டு பங்கில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்ப நல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இல்லத்தரிசிப்புக்கள், ஆற்றுப்படுத்தல்கள், திருச்சிலுவைப்பாதை தியானம், திருப்பலி, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருளடையாளம் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வின் இறுதிநாள் பங்கின் குடும்ப நாளாக அனுஸ்ரிக்கப்பட்டு அன்று மாலை அன்பிய உணவுப் பகிர்வும் கலைநிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றன.

By admin