மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற இம்முகாமில் 27 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

அத்துடன் தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு உடுவில் செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற்றது.

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றொயிஸ்ரன் அவர்கள் கலந்து நெறிப்படுத்திய இந்நிகழ்வில் கருத்துரைகள், விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் 40 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin