தேசிய கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இளையோருக்கான வருடாந்த தியானம் வருகின்ற மாதம் 11,12,13ஆம் திகதிகளில் தலவில புனித அன்னம்மாள் திருத்தலத்தில் நடைபெறவுள்ளது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஹெலன பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவிற்கு பொறுப்பான அயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் நம்பிக்கையின் திருப்பயணிகள்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ள இத்தியானத்தில் பங்குபற்ற விரும்புவோர் பங்குத்தந்தையர்கள் ஊடாக பதிவுசெய்யது இதில் இணைந்துகொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

By admin