புத்தளம், வவுனியா, இளவாலை, யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற இளையோரை இணைந்து முன்னெடுக்கப்பட்ட வதிவிடப்பயிற்சி பட்டறை கடந்த 15,16,17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலாமுற்றத்தில் நடைபெற்றது.

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இவ்வதிவிட பயிற்சி பட்டறை நிகழ்வில் இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி, கருத்துரைகள், அரங்க விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், ஆளுமை விருத்தி பயிற்சிகள் என்பன இடம்பெற்றதுடன் 60ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin