இளவாலை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் கலந்து தியான உரை, செபமாலை, சிலுவைப்பாதை, குழு செயற்பாடு என்பவற்றின் ஊடாக இளையோரை நெறிப்படுத்தினார்.

தொடர்ந்து மறைக்கோட்ட இளையோருக்கான புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ், மறைமாவட்டட நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் மற்றும் இளவாலை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 120ற்கு அதிகமான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin