இளவாலை புனித அன்னாள் ஆலயத்தின் 180ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வுடன் இணைந்த ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலய அருட்பணிச்சபையினரின் உதவியுடன் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை தேவராஜன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin