இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2023ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளரும் பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி பிரதீபா காயத்திரி அவர்கள் பிரதம விருந்தினராகவும் லண்டன் நாட்டை சேர்ந்த பாடசாலையின் பழைய மாணவி திருமதி ஜெறால்டின் கிறிஸ்ரஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin