இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டம் இறம்பைக்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான ஆன்மீக வலுப்படுத்தல் கருத்தமர்வு கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை டலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறம்பைக்குளம் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை விமல் றோய், கிளரேசியன் சபை அருட்தந்தை வரதன், கிளரேசியன் சபை அருட்சகோதரர் இருதயராஜ், திரு. நிக்சன், திரு. முகுந்தன் ஆகியோர் வளவாளராக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் என்பவற்றின் ஊடாக இளையோரை நெறிப்படுத்தியிருந்தனர்.

கருத்தமர்வை தொடர்ந்து மாலை நற்கருணை ஆராதனை நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 60 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin