இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து “மகிழ்வின் மாதா பிரசீடியம்” என்னும் பெயரில் 20 பேரை அங்கத்தவராக கொண்ட புதிய மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா தலைவர் மற்றும் செயளாலர் கலந்து சிறப்பித்தனர்.

By admin