ஆவணகம் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட 60ஆவது ஆவணக்கண்காட்சி கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகி 22ஆம் திகதி இன்று சனிக்கிழமை வரை யாழ்ப்பாணம் பத்திரிசியார் வீதியில் அமைந்துள்ள லொயலாஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

ஜேர்மன் நாட்டில் வசிக்கும் திரு. அன்ரன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கண்காட்சியில் ஓலைச்சுவடிகள், முத்திரைகள், பண்டைய தற்போதைய நாணயங்கள், பத்திரிகைகள், வரலாற்று நூல்கள், நம்மவர் வரலாற்று பதிவுகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

வரலாறு சார்ந்த முன்னோரின் வாழ்வியல் சம்மந்தமான தேடல்களின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட இக்கண்காட்சியின் முதல்நாள் நிகழ்வுகளை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் அரம்பித்துவைத்ததுடன் இக்கண்காட்சியை அருட்தந்தையர்கள், பொதுமக்களென பலரும் பார்வையிட்டனர்.

By admin