மட்டக்களப்பு மறைமாவட்டம் ஆயித்தியமலை புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

30ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நீக்கிலார் ஆலயத்திலிருந்து அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரையும் தொடர்ந்து மாலை நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், வவுணதீவு பிரதேச செயலாளர் சத்தியானந்தி, 243 இராணுவ படைப்பிரிவு கட்டளைத்தளபதி சந்திம குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin