2024இல் நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுவேட்பாளராக களமிறங்கும் திரு. அரியநேத்திரன் அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தனர்.

கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் பொதுவேட்பாளரின் தேவைப்பாடு மற்றும் அவரின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

By admin