வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடிள்ளார்.
யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அத்துடன் இலங்கை இரானுவத்தின் பலாலி படைப்பிரிவு அதிகாரி திரு. பெர்னாண்டோ அவர்கள் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமையும் சலேசியன் துறவற சபை மாகாண முதல்வி அருட்சகோதரி தேவதாஸ் மார்கிறட் அவர்கள் தலைமையிலான அருட்சகோதரிகள் குழு 27ஆம் திகதி வியாழக்கிழமையும் ஆயர் அவர்களை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.