யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க உறுப்பினரான தயாளினி றதீஸ்குமார் அவர்களின் அன்புத்தந்தை முடியப்பு சிங்கராயர் அவர்கள் கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

பாசையூரை சேர்ந்த ஈழத்தின் கவிஞரும், எழுத்தாளரும், அரங்க ஆளுமையாளருமாகிய இவர் பாசையூரானைப்பாடு, தூது போ தென்றலே, வியாகுல அன்னை வெண்பா, மடுஅன்னை பிள்ளைத்தமிழ், போன்ற மரபுக்கவிதை நூல்களையும், கூவிப்பறந்த கோகுலங்கள், பாசையூரும் நாட்டுக்கூத்தும் போன்ற ஆய்வு நூல்களையும், செம்மனத்தான் என்ற நாட்டுக்கூத்தினையும், உயிராயுதம் என்ற முள்ளிவாய்க்கால் துயரங்களை வெளிப்படுத்திய குறுங்காவியத்தினையும் பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும், பல நாடகங்களையும் எழுதியவர்.

அன்னாரின் வாழ்விற்காக நன்றிகூறி அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin