யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை றேஜிஸ் ராஜநாயகம் அவர்கள் கடந்த 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அருட்தந்தை அவர்கள் கிளிநொச்சி, நாரந்தனை, புதுக்குடியிருப்பு, மன்னார் விடத்தல் தீவு ஆகிய பங்குகளில் பங்குப் பணியாற்றியுள்ளதுடன் நீண்ட காலமாக யாழ். பல்கலைக்கழக ஆன்மீகக் குருவாகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் புனித சவேரியார் குருத்துவக்கல்லூரி விரிவுரையாளராகவும், புனித மடுத்தீனார் சிறிய குருமட ஆன்மீக
இயக்குனராகவும் பணியாற்றியுள்ளதுடன் 10ற்கும் அதிகமான ஆன்மீக, உளவியல் நூல்களையும் எழுதியுள்ளார்.

சிந்தனையாளராக எழுத்துத்துறையில் ஈடுபாடுகொண்ட இவர் பாதுகாவலன் பத்திரிகையில் மிக நீண்டகாலமாக ஆன்மீக கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் அர்த்தமுள்ள ஆன்மீகம் எனும் தலைப்பில் யாழ் மறை அலை தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார்.

அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அன்னாரின் ஆன்மா
இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin