அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது.

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையும் தீவக மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் தலைமையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் மற்றும் யுத்ததத்தில் காணாமலக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தீவகம், அல்லைப்பிட்டி பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்படட மக்களுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது 2006ஆம் ஆண்டு இதேநாள் வலிந்து காணாமலாக்கப்பட்டார்.

அவருடன் சேர்ந்து பயணித்த திரு. வின்சன் விமலதாஸ் அவர்களும் அருட்தந்தையுடன் காணாமல் ஆக்கப்பட்டதுடன் இவர்களைப் பற்றிய உண்மையான தகவல்கள் இதுவரை வெளிவராமல் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin