யாழ். மறைமாவட்டம் பண்டத்தரிப்பு பங்கை சேர்ந்தவரும் சிலாபம் மறைமாவட்டத்தில் பணியாற்றுபவருமான அருட்தந்தை ஆபிரகாம் பர்ணபா அவர்கள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டதன் 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டின் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் கட்டாரிலுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இத்திருப்பலியில் கலந்து அருட்தந்தையின் பணிவாழ்விற்கு நன்றிகூறி செபித்தனர்.

 

By admin