கிளிநொச்சி அம்பாள்குளம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

இத்திருவிழா திருப்பலியில் பங்குமக்கள், இந்து சமய மக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin