தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக அச்சுவேலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் அச்சுவேலி புனித சூசையப்பர், புனித அந்தோனியார் மற்றும் நவக்கிரி புனித றீற்றம்மாள் ஆலயங்களில் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சிறப்பு திருப்பலிகளும் திருப்பலி நிறைவில் பேரப்பிள்ளைகளால் தாத்தா பாட்டியர்களுக்கான கௌரவிப்புகளும் தொடர்ந்து ஒன்றுகூடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் சேகரிக்கப்பட்ட காணிக்கைகள் கோப்பாய் புனித அன்னை திரேசா முதியோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டன.

By admin