செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்
கொழும்பு கோட்டை புதையிரத நிலையம் முன்பாக யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தையர்கள் ஜீவந்த பீரிஸ், சத்யவேல், மற்றும் செறாட் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போராட்டத்தில்…
எம்மாவுஸ் தியானம்
வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்ட இளம் குருக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட எம்மாவுஸ் தியானம் ஆடி மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு…
“மகத்தான மனிதநேயம் – திரையில் ஒரு கதை” குறும்படப் போட்டி
இளையோர்களின் படைப்பாற்றல், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் திரைப்படத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தினால் குறும்படப் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. “மகத்தான மனிதநேயம் – திரையில் ஒரு கதை” எனும் கருப்பொருளில் நடைபெறும் இப்போட்டியில் தனிநபராகவோ…
தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு
திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை தாதியர் நிலையத்தில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி ஜெரால்டின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
ஊடகத்துறை சார்ந்த கள அனுபவ பயிற்சி
ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பதுளை மறைமாவட்டத்திலிருந்து வருகைதந்த மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஐவன் றொட்ரிக்கோ மற்றும் இணைப்பாளர் செல்வன் அல்வீனஸ் ஆகியோர் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் இடம்பெற்ற…
