84ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 84ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் யூன் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 22ஆம் திகதி வரை மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்டர் சோசை…

வலையன்மடம் புனித செபமாலை அன்னை ஆலய திறப்புவிழா

இரணைப்பாலை வலையன்மடம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபமாலை அன்னை ஆலயக் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ் ஆலய திறப்புவிழா யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மனத யகம்பத் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இளையோர் குழுக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

ஓவியம் வரைதல் ஊடாக இளையோரின் உணர்வுகளை அடையாளப்படுத்தி அவற்றை வழிப்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் குழுக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு யூன் மாதம் 10ஆம் திகதி செவ்வாய்கிழமை கிளிநொச்சி சிவபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. “குடும்ப மைய…

அரங்க நுட்ப பயிற்சி

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள் அரங்கு சார் அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அரங்க நுட்ப பயிற்சி யூன் மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி 21ஆம் திகதி…