எழுவைதீவு பங்கு கடல் சிலுவைப்பாதை தியான ஆற்றுகை

தவக்கால சிறப்பு நிகழ்வாக எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ‘கடலில் கரையும் குருதி’ கடல் சிலுவைப்பாதை தியான ஆற்றுகை கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் எழுவைதீவு கடல் பிரதேசத்தில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை…

Renown President School football Championship

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட Renown President School football Championship பிரிவு 1இல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு சுகததாஸ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மூன்றாம் இடத்திற்கான இப்போட்டியில் பங்குபற்றிய புனித பத்திரிசியார்…

அன்பின் பணியாளர் துறவற சபை குருக்களின் பணித்தள திறப்பு விழா

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்ற இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள அன்பின் பணியாளர் துறவற சபை குருக்கள் தங்கள் பணியை பருத்தித்துறை மறைக்கோட்டத்திலுள்ள மிருசுவில் பங்கில் ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான பணித்தள திறப்பு விழா நிகழ்வு 16ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது, இந்நிகழ்வில்…

பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களின் தவக்கால யாத்திரை

பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரையில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலத்தை தரிசித்து அங்கு…

மணற்காடு பங்கு இளையோர் ஒன்றிய திருச்சிலுவைப் பயணம்

மணற்காடு பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட திருச்சிலுவைப் பயணம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி பொலிகண்டி புனித குழந்தை இயேசு ஆலயத்தில்…