Category: What’s New

அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்

யாழ் மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் பாதுகாவலரான புனித. யோண் மரிய வியன்னியின் திருநாள் 24-09-2020 வியாழனன்று யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் காலை 9.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இத்திருப்பலியைத் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்து மறையுரையாற்றிய ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின்…

200 ஆண்டு நிறைவு நாள்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு 19.09.2020 சனிக்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதியம் 12.00 மணியளவில் மடுத்திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பங்கு இளையோரின் எடுதுக்காட்டான முயற்சி

தேசிய இளையோர் தினத்தில் புதுக்குடியிருப்பு பங்கு இளையோரின் முயற்சியால் புது குடியிருப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு வறிய குடும்பத்திற்கு தற்காலிக வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இளையோரின் இம்முயற்ச்சி அப்பிரதேசத்தில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

‘நாடகக் கீர்த்தி’ விருது மரிய சேவியர் அடிகளாருக்கு

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கைக் கலைக்கழகம், அரச நாடக ஆலோசனைக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 11.09.2020 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு, தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற அரச நாடாக விழாவில் அரச…

புதுப் பொலிவுடன் பரந்தன் பங்குப் பணிமனை

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய பங்குப் பணிமனை புனரமைப்பு செய்யப்பட்டு 03.09.2020 வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலய வளாகத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் சுருபமும்…