முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கப்புச்சியன் அருட்தந்தையர்களால் நடாத்தப்படும் Capital Campusஇல் முன்னெடுக்கப்பட்ட பட்டமளிப்பு விழா 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
Capital Campus இயக்குனர் கப்புச்சியன் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அளம்பில் சுவாமி தோட்ட இயக்குனர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் 19 மாணவர்கள் கணினி, ஆங்கிலம், சிங்களம் ஆகிய கற்கை நெறிகளை பூர்த்தி செய்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

By admin