வறிய மக்களின் வாழ்வாதாரத்தையும் கிராம மட்ட உற்பத்திகளையும் ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்டத்தில் அமைக்கப்பட்டுவந்த Caritas Food city கட்டடத்தொகுதியின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வரும் கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குநருமான அருட்தந்தை போல் றொபின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் கலந்து கட்டடத்தொகுதியை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இக்கட்டடத்தொகுதியில் விற்பனை நிலையம், உணவகம், தங்குமிடம் ஆகியவை உள்ளடங்கியுள்ளதுடன் கிராம மட்ட உற்பத்திகளை தரப்படுத்தி சந்தைப்படுத்தல், வசதியற்றவர்களுக்கு வவுச்சர்முறை கொள்வனவு, இலவச வாசற்படி விநியோகங்கள், விசேட சேமிப்புத்திட்ட முறைமை, இலவச மரக்கன்று விநியோகம் போன்ற பல சேவைகளையும் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.

By admin